• புதியவை

    [இலுமினாட்டி-28] கத்தியும் உலக அரசியலும் ( kathi movie and world politics)

    கத்தி படத்திற்கான எதிர்ப்பலைகள் தமிழ் தேசிய கட்சிகளிடமிருந்து தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேலையில் அப்படம் உலகை ஆதிக்கம் செய்யும் ரகசிய அமைப்பான இல்லுமினடி (illuminati) என்பவர்களால் நேரடியாக தயாரிப்பு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. 




    ஈழப் படுகொலை முதல், உலகில் நடக்கும் அனைத்து கொடிய செயல்களை செய்தவர்கள் அல்லது செய்ய உதவியவர்கள் மற்றும் செய்ததால் பயனடைதவர்கள் இவர்களே. இவர்களது நோக்கம் “புதிய உலக கட்டுமானமே ஆகும்” (New World Order), அதாவது உலகை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவருவதாகும். உலகில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் இந்த நோக்கத்திற்காகவே இவர்களால் நடத்தப்படுகிறது. இதில் ஊடக, திரைத்துறை நிறுவனங்களும், அடங்கும். (எ.கா.warner bros., Fox star, Walt Disney, etc.,) மற்றும் coke, pepsi, போன்ற பெரிய நிறுவனங்களும் இவர்களுடயதே!
    இதுவரை தமிழ் திரைத்துறையில் இவர்களுடைய பங்கு பெருமளவில் இல்லை. ஆனால் தற்ப்பொழுது கத்தி படத்தின் மூலமாக இவர்கள் தமிழ் திரைத் துறையில் புகுந்துள்ளனர். இவர்கள் எடுக்கும் அனைத்து படங்களிலும் இவர்களுடைய தனித்துவமான குறியீடுகளான 666, ஒற்றைக் கண் அடையாளம், பிரமிட்டு (pyramid), ஆகியவற்றை பயன்படுத்தி தங்களது ஆதிக்கத்தை பறைசாற்றுவர். தற்பொழுது இந்த கத்தி படத்திலும் இந்த குறியீடுகள் இருப்பது கவனிக்கத்தக்கது. எ.ஆர்.முருகதாசு முன்பே இல்லுமினாடிகளின் நிறுவனமான பாக்சு சுடார் (Fox star) உடன் சேர்ந்து வத்திக்குச்சி மற்றும் எங்கேயும் எப்போதும் படத்தை வெளியிட்டது நமது சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது.
    இவர்களின் புதிய உலக கட்டுமானத்தை நிறுவுவதற்கு எதிராக இருக்கும் ஒரே இனம் தமிழினமாகும். இவர்களுக்கு எதிராக இருந்த அனைத்து இனங்களும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. மரபு சார்ந்த கூறுகளை அழிப்பதாலயே இவர்களால் புதிய உலக கட்டுமானத்தை கொண்டுவர முடியும். உளவியல் ரீதியாக மனிதர்களை அடிமைப் படுத்துவதே இவர்களின் உச்சகட்ட நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைய எதையும் செய்ய துணிந்தவர்களே, செய்தவர்களே இந்த இல்லுமினாடிகள் (illuminaati) ஆவர். அமெரிக்காவில் இடிக்கப்பட்ட டிவின் டவர் (twin tower), world trade center இவர்களாலயே இடிக்கப்பட்டது, 

    மற்றும் தற்போது காணாமல்போன மலேசிய விமானமும் (MH 17) இவர்களாலேயே கடத்தி காணாமல் செய்யப்பட்டது. ISIS என்ற தீவிரவாத அமைப்பு இவர்களாலயே தற்போது உருவாக்கப்பட்டதும் கூட. இப்போது புரிகிறதா, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஈழத்திற்கு எதிராக உதவியதின் பின்னனி... விழித்தெழுங்கல் தோழர்களே தமிழர்களாக! தூங்கியது போதும்! பிச்சை கேட்டதும் போதும்! உண்மையை உணர்ந்து தமிழினத்தை காப்பாற்ற ஒன்றுபடுங்கள்

    No comments:

    Post a Comment

    Total Pageviews