• புதியவை

    லூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் ? (அ) எது? (What is Lucifer or Morning Star)

    அமேரிக்க அறிவியளாலர் கார்ல் சகன் Carl Sagan சொல்கிறார் "நாம் நட்சத்திரதின் துகள்களால் ஆனவர்கள்" என. ஆம் உறவுகளே, இதை தான் நம் முன்னோர் "அண்டத்தில் இருப்பது தான் பிண்டதில் இருக்கு, பிண்டத்தில் இருப்பது தான் அண்டதில் இருக்கு" என கூறினர்.



    ஃப்ரீ மேசன்கள் லூசிபர் பற்றி கூறும் தகவல்களை காண்போம்.

    33டிகிரி ஃப்பிரீ மேசன் மற்றும் காட்டிசு ஒழுங்கின் இறைதன்மை கொண்ட பெரிய தலைவருமான ஆல்பர்ட் பைக் தனது நூலில் "லூசிபர், ஒளியின் மகன் புலன் உணர்வால் குறைந்த அளவே உணரக்கூடிய மறைவான சிறப்புமிக்க தாங்கமுடியாத ஒளியை கொடுக்க கூடியவனா ? (அ) சுயநலமிக்க ஆன்மாவா? ஆம் சந்தேகபட வேண்டாம் " என்கிறார்.

    ஃப்பிரீ மேசனரியின் சிறந்த தத்துவியளாளர், 33டிகிரி மேசன் மற்றும் ரோசிகுரிசியர்களின் தளபதியுமான Manly P. Hall, தனது ALL SEEING EYE என்ற நூலில் கூறுவதாவது, " லூசிபர் என்பது தனிபட்ட அறிவாற்றலையும் விருபத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த அறிவாற்றல் மற்றும் விருப்பம் , இயற்கையின் ஆதிக்கத்தை எதிர்க்க கூடிய போராளியாகவும் இயற்கையின் உந்துதலுக்கு மாறானதாகவும் இருக்கிறது. திருவெளிபாட்டில் பேசப்படும் விடியர்காலத்தின் நட்சத்திரம் என்பது வெள்ளி கோளாக வர்ணிக்கபடும் லுசிபரே. இது உலக மாயைகளை கடக்க வழங்கப்படும் ஒளி ஆகும்."


    லூசிபர் சத்தானா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் திரைபடங்களும்  நூல்களும் லூசிபரை தொடர்ந்து சத்தானாகனவே காட்டி வருகிறது. உங்களுக்கு உண்மை வேண்டுமா ரகசிய அமைப்புகளிளும் பழைய மதங்களிளும் தேடுங்கள்.  இப்போழுது உள்ள அனைத்து மதங்களின் ஆணி வேரும் பேகானிசதில் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.


    எந்த மததின் (அ) கலாச்சாத்தின் பெயர் தெரியாதோ, அதை எல்லாம் பேகானியம் என்று அழைப்பது தற்போழுதைய தவறான வழக்கமாக உள்ளது.

    லூசபரானாலும் சரி, இயேசுவானாலும் சரி இரண்டுமே குறிப்பது மனிதனுக்கு விழிப்புணர்வு அளிக்கும் அதே ஒளியை தான்.

    16 "திருச்சபைகளுக்காக உங்கள்முன் இவ்வாறு சான்று பகருமாறு இயேசுவாகிய நான் என் வானதூதரை அனுப்பியுள்ளேன். தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும் நானே! ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே!" திருவெளிப்பாடு 22 :16
    (Jesus also claimed himself as morning star)

    லூசிபர் யார் ?, என்ற கேள்விக்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும். நீங்கள் உண்மையை தேட விரும்பினால் தொடக்ககால கலாச்சாரங்களில் தான் தேட வேண்டும்.

    லூசிபர்  என்பது Phosphorus யும் குறிக்கும். இது நமது மரபணுவை கட்டமைக்கும் ஓர் பகுதி பொருள் ஆகும். இது கிரேக்கத்திலிருந்து வந்த சொல் Phosp-Horus இதற்கு ஒளியை கொண்டுவருபவன்(Light bringer) என்றேபொருள் .

    Lucifer என்பது இலத்தின் சொல். இது விடியற்கால நட்சத்திரமான வெள்ளி கோளுக்கு (venus) பெயராக தரப்பட்டுள்ளது.  இச்சொல்  மூல விவிலியத்தில் (Bible)  எபிரேயத்தில் (Hebrew) "helel" என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு சிறப்பாக ஒளிர்பவன் என்று பொருள்.

    வெள்ளி கோளானது அதிகாலையில் கிழக்கே அடி வானத்தில் ஒளிர்கிறது. ஃபிரீ மேசனரியின் சடங்குகள் அனைத்தும் கிழக்கு நோக்கி, அதிகாலையின் புதல்வனின் வெளிச்த்திலையே நிகழ்த்தப்படும். பாரம்பரிய கத்தோலிக்க கிறித்தவ கோவில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும்.

    நீங்களே சிந்தியுங்க!
    லூசிபர் ஒளியை கொண்டுவருபவனாக இருக்கும்போது அவன் எப்படி இருளின் இளவரசனாகவும் சாத்தானாகவும் இருக்க முடியும்.

    நம் முன்னோர்கள் உடலியலை கலை நயத்துடன் உருவகப்படுத்தினர். லூசிபர்/ இயேசு இவர்கள் எங்கேயும் தேடாதீர்கள்  . அவர்கள் நமக்குள் இருக்கிறார்கள். நமது மரபணுவில் இருக்கிறார்கள். அது பாஸ்பரஸ். அதுவே ATP மூலக்கூறாக நமது செல்களுக்கு சக்தி அளிக்கிறது.

    கடவுள்- கட+உள் நமக்கு உள்ளே தான் எல்லாம் உள்ளது. தன்னை அறிந்தவன் உலகையே அறிவான்.
    அண்டத்தில் உள்ளவை தான் நம் பிண்டத்தில் உள்ளது. நம் பிண்டத்தில் உள்ளவை தான் அண்டத்தில் உள்ளது.

    லுசிபர், ஒளியின் தூதன் இருளுக்கு எதிராக ஒளியை வீசுபவன். மனிதருக்கு விழிப்புணர்வை அதிகப்படுத்துபவன். அவன் அண்டத்தில் வெள்ளி கோளாகவும் பிண்டத்தில் பாஸ்பரசாகவும் ஒளியை தருகிறான். இவன் ஆன்ம எழுச்சிக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளான்.

    லூசிபரின் வீழ்ச்சி என வர்ணிக்கப்படுவது எது எனில் நமது மரபனுவின் வீழ்ச்சியும் விழிப்புணர்வின் வீழ்ச்சியுமே ஆகும். நாம் நமக்குள் தேடுவதை விட்டு வெளியில் தேடிக்கொண்டிருக்கிறோம். ஒளியைவிட்டு விலகிசெல்கிறோம்.


    உள் கட.

    நன்றி.

    1 comment:

    1. https://youtu.be/-fnjQz3tAh8?list=PLw_oR2PvIg_JtLaOMn4mUK5HuPF2ja6jY

      ReplyDelete

    Total Pageviews