• புதியவை

    [இலுமினாட்டி 46) உலக அரசியலும் நாட்டு கோழியும்

    நாட்டுக்கோழி இனம் காக்க 15நிமிடம் நேரம் ஒதுக்குங்கள் Facebook whatup 10குருப் Share செய்யவும்.

    சேவல் சண்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலும்



    பன்னாட்டு நிறுவனங்கள் என்றைக்கு விவசாயத்துறையில் கால் பதித்ததோ அன்றே நமது பாரம்பரிய விளைபொருட்களின் விதைகளை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி அதிக உற்பத்தி என்ற சூழ்ச்சியான கோசத்துடன் நமது விவசாயிகளை ஏமாற்றினார்கள். அதன் விளைவாக இன்று நமது பாரம்பரிய சிறுதானியங்கள் நெல்வகைகள் காணாமல் போயின.
    அதே வழியில் விவசாயிகளுக்கு துணையாக வருவாயுடன் விவசாயத்திற்கு துணையாக இருக்கும் கோழிகளை அழிப்பது .
    மற்றும் கறிக்கோழி இனம் என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கோழிகளை விற்பனை செய்வது என்ற திட்டத்தோடு பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டுக் கோழிகளை அழிக்க கையாண்ட மற்றுமொரு சூழ்ச்சிதான் கோழிசண்டைக்கு தடை.
    நேருக்கு நேராக மூஞ்சியில் குத்தி கொலை செய்வது விளையாட்டு, கண்மூடித்தனமாக பந்தை எரிந்து கொலை செய்வதும் விளையாட்டு ஆனால் கோழிகளை வைத்து விளையாண்டால் குற்றமாம். இதைக் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கேட்கும் அமைப்புகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் விலைபோயின விவயாயிகளுக்கும் மக்களுக்கும் எதிராய் செயல்பட்டு இருக்கின்றன.
    நாட்டுக் கோழிகளை அழித்தால் தான் பிராய்லர் கோழி வளர்ப்பு பெருகும் அதற்கு தீவனமாக மருந்தாக பன்னாட்டு நிறுவனங்களின் இரசாயன வியாபாரம் பெருகும். இந்த வியாபார நோக்கம் தான் நாட்டுக் கோழி அழிப்புக்கு காரணமானது.
    நாட்டுக் கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவை, வளர்ப்பது எளிது. இக் கோழிகளை நமது விவசாயிகள் வளர்ப்பதால் பன்னாட்டு இரசாயன வியாபாரம் நடப்பது தடைபடும் . மேலும் கோழியின் கழிவுகள் சிறந்த எருவாகவும் விவசாயிக்கு உதவியதால் இரசாயன உரங்களின் தேவையும் பூச்சிகொல்லிகளின் தேவையும் குறைவாக இருந்தது. இந்த வியாபாரங்களைப் பெருக்க நாட்டுக் கோழிகளை அழிப்பதே அந்நிறுவனங்களின் இரசாயனம் மற்றும் மருந்துகள் விற்பனையை அதிகப்படுத்த அந்நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.
    இப்படி நிறுவனங்கள் செயல்படும்பொழுது விவரமானவர்கள் எதிர்க் கேள்வி கேட்டு விட்டால் அவர்களின் வாயை அடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமே சி எஸ் ஆர் திட்டம் அதாவது வரிவிலக்கு பெற்று லஞ்சம் கொடுத்து மக்களுக்கு பொய்யான பிரச்சாரம் செய்ய தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள எதிர்ப்பாளர்களை பணத்தால் விலைக்கு வாங்கிட சமூக சேவை என்ற பெயரில் நிறுவனங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. ஆனால் இது மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கின்றது என்று பொய்க்காரணம் கூறி. ஆகவே இந்த தொகைக்கு வரி விலக்கு வேறு.
    தரமான சேவல்களை அழிக்காமல் நாட்டு கோழிகள் இனத்தை அழிக்க இயலாது. ஆகவே கிராமங்கள் தோறும் கறிக்கோழி குஞ்சுகள் இரசாயனக் கலவை பூசி கலர் கலராக குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டு மக்களை மயக்கி வளர்க்க தூண்டியது. இதன் மூலம் தரமான நாட்டுக் கோழிகள் வளர்ப்பை குறைத்தது.
    அடுத்ததாக நாட்டுக் கோழி முட்டைகளை விட பிராய்லர் முட்டைகளை குறைந்த விலையில் விற்றது மட்டுமல்லாமல் பிராயிலர் கோழி முட்டைகள் கொழுப்பு அற்றது புரதம் நிறைந்தது என்றும் விளம்பரம் செய்து சக்கையை சாப்பிடுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் என்றது . மருந்துகளால் சேவலின் துணையின்றி முட்டைகளை இட வைத்து விற்பனை செய்து லாபம் பார்ப்பது. அம்முட்டைகளே நல்லது என்று விளம்பரம் செய்து மக்களை வாங்கத் தூண்டியது.
    எனினும் நாட்டுக் கோழிகளை விட பிராய்லர் கோழிகள் உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிகரித்துவிட்டதே இப்பொழுது எதற்காக இப்படி பன்னாட்டு நிறுவனங்கள் சதி செய்யவேண்டும் என்ற கேள்வி எழுவது சரிதான்.?
    பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை தனது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி முதலில் சந்தையில் போட்டியை உருவாக்கும் . அங்கு நாங்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கும் பொய் பிரச்சாரங்களை அரங்கேற்றி, அதன்பிறகு போட்டியான தயாரிப்புகளை முடக்கும். இதுவே அந்நிறுவனங்களின் தொடர் வெற்றிக்கு காரணம்.
    மனித உடல் நலனுக்கு கேடு விளைகின்றது என்பதால் கறிக்கோழிகள் எதிர்காலத்தில் மக்களால் ஒதுக்கப் படலாம். ஆகவேதான் தான் நாட்டுக்கோழிகள் உண்பதை வைரஸ் பரவுகின்றது என்ற புரளியும் தற்பொழுது பரப்புரை செய்யப்படுகின்றது.
    மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு மீண்டும் வந்துவிடக் கூடும். இந்த பயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்தால் வியாபாரம் நிம்மதியாக செய்ய இயலாமல் போகின்றது. பயத்துடன் தொழில் செய்வதை பன்னாட்டு நிறுவனங்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள்.ஆகவே நாட்டுக் கோழி உற்பத்திக்கு உதவும் சேவல்களை அழிக்க வழிதேடி வெற்றியும் பெற்றார்கள். சேவல் சண்டைக்கு தரமான சேவல்கள் வளர்க்கப்படுவது மட்டுமல்ல அவை இனப்பெருக்கத்திற்கு உதவி நல்க தரமான நாட்டுக் கோழிகள் உருவாகவும் காரணமாக இருக்கின்றான்.
    பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார தந்திரங்களின் காரணமாக எதிர்காலத்தில் மிருகங்களைக் கொல்வது குற்றம் என்று நமது நாட்டில் சட்டம் போட்டுவிட்டு அவர்கள் ஏற்றுமதி செய்யும் பதப்படுத்தப்பட்ட ஆடு மாடு கோழிக் கறிகள் நமக்கு கிடைக்கலாம்
    நாட்டு கோழிகள் அழிப்புடன் கலப்பினக் கோழிகள் உருவாக்கம் பிராய்லர் கோழி வளர்ப்பில் புகுத்தப்படுகின்றது. இவைகள் நாட்டுக் கோழிகள் என்று சொல்லி விற்பனையும் செய்யப்படுகின்றது

    பிரபல கம்பெனிகள் இதில் கால் பதிக்க தொடங்கி விட்டர்கள்
    வெள்ள முட்டை 4₹ விற்கும் போது அதே உற்பத்தி செலவில் Brown கலர் முட்டையை நாட்டு முட்டை என்று கூறி 10₹ விற்பனை செய்கிறார்கள்

    இதை சென்னையில் உள்ள பல Organic store விற்பனை செய்கிறார்கள்

    மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்,
    வண்ண பிராய்லர் கோழிகளை நாம் யாரும் வளர்க்க கூடாது, அதற்கு கம்பெனி தீவனம் போட்டு அது விடும் முட்டை நாட்டு முட்டை என்று கூறி விற்பனை செய்ய கூடாது.
    அது மாகபாவம் காரியம்.அப்படி செய்தால் அதற்கு தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.

    . இந்நிலையில் தரமான நாட்டு சேவல்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் போட்டிக்கு காரணமாக அமையும்
    சேவல் சண்டைக்கு வளர்க்கப்படும் சேவல்கள் தரமான நாட்டு சேவல் ஆகும் . இந்த சேவல்கள் இருக்கும் வரை எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் நாட்டுக் கோழிகள் சந்தையில் போட்டிக்கு வர வாய்ப்புள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆகவே நமது முன்னோர்கள் வீர விளையாட்டு என்ற பெயரில் தரமான மாடுகள் கோழிகள் உற்பத்தி குறையாமல் இருக்கவும் அவர்களது விளையாட்டுக்கள் பயன் அளித்தது.ஆகவே பன்னாட்டு நிறுவனங்களின் பிராய்லர் கோழி விற்ப்பனைக்கு எதிர்காலத்தில் நாட்டுக் கோழிகள் போட்டியாகி விடவே கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியே சேவல் சண்டை தடை.
    இதற்கு துணையாக சமூக சேவை அமைப்புகளும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பிச்சை வாங்கிப் பிழைக்கும் தேச துரோகிகளும் எதிர்கால சமூகத்தை அளிக்கும் இந்த இழிவான செயலை நியாயப்படுத்தி நமது விவசாயிகளுக்கும் நமது மக்களுக்கும் எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் செயலுக்கு துணையாய் இருந்து நமது பாரம்பரிய கோழி வளர்ப்புக்கு துரோகம் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த துரோகம் அறியாத பாமர மக்கள் இவர்களின் அமைப்புகளுக்கு நன்கொடையும் கொடுத்து அவர்கள் அழைக்கும்போதெல்லாம் சென்று அவர்களுக்கே சலாம் போடும் கேவலமும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றான.
    இந்திய விவசாயிகளின் நண்பனான நாட்டுக் கோழிகளை ஒழிப்பது, நாட்டு மாடுகளை ஒழிப்பது, இந்திய விவசாயிகளை விவசாயத்தில் இருந்தே விரட்டுவது . பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இனி இந்தியாவில் விவசாயம் செய்யும் அதற்க்கு துணையாக உலக வர்த்தக அமைப்பின் விவசாய ஒப்பந்தம் 1995 இன் திருத்தம் 2013 இன் படி இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது.
    அந்த ஒப்பந்தம் அடிப்படையில் பன்னாட்டு விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு வரி நீக்கம்.
    பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கிக்கொள்ள வசதியாக புதிய நிலங்கள் கையகப் படுத்தும் சட்டம் திருத்தம். அதாவது அரசு நிலங்களை நிறுவனங்களுக்கு வாங்கிக் கொடுக்கும் பகுதியில் உள்ள 80 சதவீத விவசாயிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே அந்நிலங்களை வாங்கலாம் என்ற விதிமுறையை மாற்றிவிட்டார்கள். ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விவசாய நிலம் நிறுவனங்களுக்கு தேவை என்றால் அந்த நிலத்தின் சொந்தக் காரர்கள் கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் அவர்கள் தேச விரோதிகளாக்கப்படுவார்கள்.

    நாட்டுக்கோழி இனம் தமிழ்நாட்டு இரண்டு முக்கிய இனம் உள்ளது.
    1)சிறுவிடை நாட்டுக்கோழி இனம்
    2)பெருவிடை நாட்டுக்கோழி இனம்

    இந்த இனம் காக்கும் பொறுட்டு சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுபொறிப்பான்.வைத்து குஞ்சு பொறித்து விற்பனை செய்கிறோம் சிறுவிடை நாட்டு முட்டை சென்னையில் விற்பனைசெய்து வருகிறோம் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரத்துக்கு முட்டை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம் குறைந்தது 100முட்டை வாங்கி கொள்ள வேண்டும

    மேலும் விவரத்துக்கு Www.nattukozhi.in
    என்ற வளைதளத்து சென்று பார்க்கவும்

    Facebook பின் தொடர கிழ் உள்ள Link கிளிக் செய்யவும
    இது போன்ற தொழில் விழிப்புணர்வு கட்டுரை.தொடர்ந்து படிக்க மற்றும் நாட்டுக்கோழி பற்றி அறிந்து கொள்ள எங்கள் Nattukozhi.in Facebook page ````Like````செய்யவும்

    Like````செய்ய கிழே கொடுக்கபட்டுள்ள Link கிளிக் செய்யவும்

    https://m2.facebook.com/pages/NATTU-KOZHI/1412605692394622?fref=photo&sk=videos&refsrc=http%3A%2F%2Fwww.google.co.in%2Furl&_rdr

    பிராய்லர் முட்டை தவிர்போம், போலி நாட்டுக்கோழி முட்டை தவிர்போம். இயற்கை திறந்த வேளி மேயும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவோம்.
    வருகாலம்உங்கள்  உங்கள் குழந்தை ஆரோக்கியத்தை காப்போம்
    இந்த செய்தி பார்போர்களிடம் பணிவன வேண்டுகோள்
    இந்த செய்தி Facebook Whatup மூலம் அதிகமாக Share செய்யவும்
    நாட்டுக்கோழி இனம் காக்க பாடுபடுவோம்

    நாட்டுபசு இனம் ,கோழி இனம் அழிவின் விழிம்பில் உள்ளது இதை காக்க உங்களால் முடிந்த அளவு share செய்யவும்
    மாட்டுபொங்கல் இன்று நாட்டு மாடு. ஆடு.கோழி இனம் காக்க அனைவரையும் வேண்டி கொள்கிறோம
    நன்றி
    இது லாபம் நோக்கம் கருதி வெளியிடவில்லை.நாட்டு இனம் காக்க பட வேண்டி செய்தி வெளிஇடுகிறோம்



    -------—-------

    இங்கு பன்நாட்டு நிறுவனம் என்பது இலுமினாட்டிகளே. அதோடு வருமானம் நோக்கம் அல்ல. இந்த பாரம்பரிய இனங்களை அழிப்பதும் அதுக்கு மேலேயும்

    நன்றி.

    1 comment:

    1. அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கொம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், பெறுமதியற்ற கடதாசி நோட்டுக்களை, பில்லியன் கணக்கில் அச்சிட்டு, உலகைக் கொள்ளையடிக்கிறார்கள். அத்துடன் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய, தமக்குச் சொந்தமான கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், சாதாரண மக்களை, பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

      கடனில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது, இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடன்களால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடன்காரர்களாக மாற்றபடுவதோடு இக்கடன்கள் அதிகரிக்கப்படுமே அன்றி மீளச் செலுத்தப்படுவதில்லை. இதனால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கு எதிராகப் போராடமாட்டார்கள்.

      உலகம்பூராகவும் அனைவரும் இலகுவில் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படக் கூடியவர்களாக ஆக்கப்பட்டு, பயத்தினூடாகவும், அச்சுறுத்தியும், நலமடிக்கப்பட்ட

      சமூகம் உருவாக்கப்படுகின்றது. மக்களின் சிந்தனை, நிகழ்கால வேலைப்பழுவுடனும், அடுத்தநேரச் சாப்பாட்டுடனும் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது. உலகம் பூராக ஜனநாயகத்தை, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலின் பணநாயகம் வெல்லும்.

      - நல்லையா தயாபரன்

      ReplyDelete

    Total Pageviews