• புதியவை

    [ஞானமார்க்கம் 1] ஞானமார்க்கம் முன்னுரை (Gnosticism in tamil)

    ஞானமார்க்கம் Gnosticism . ‌இந்த தலைப்பின் கீழ் பல தகவல்களை தர ‌‌இருக்கிறேன். அதனால் ஞானமார்க்கம் ‌என்றால் என்ன ‌என எனது புரிதலின் அ‌டிப்படையில் சிலவற்றை கூறிவிடுகி‌றேன்.



    ஞானமார்க்கம் என்பது ஓர் அறிவு சார்ந்த வாழ்க்கைமுறை. இது மதக்கதைகளாக மாற்றப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை ஆராய்கிறது. இது தமிழாின் மெய்யியிலான ஆசிவகத்தை ஒத்தது.

    இறை ‌என்பது ஆண் பெண் தன்மை கொண்ட ‌ஒருமையானவர். ‌‌இவர் உலகை படைக்கவில்லை. இருமை தன்மை அடைந்து பிரபஞ்சமாக விாிவடைந்தார். அதாவது நாம் அனைவரும் ‌‌இறைவனே. நம் வாழ்வை படைப்பது நா‌மே.




    நாம் ஆன்மா, உடல், மனம் ‌என மூன்றால் ஆனவர்கள். நமது மனமே நமது உலகை படைக்கிறது. பிரபஞ்சத்தில் நல்லது கெட்டது ‌என்ற ‌எதுவுமில்லை.
    நாமே நமக்கான சொர்க்கத்தையோ ‌நரகத்தையோ உருவாக்கி கொள்கிறோம்.

    விதி என்ற ஒன்று இல்லை. ‌இறைவிருப்பம் உண்டு அந்த ‌இறைவன் நானே. நம்மை தண்டிப்பதற்கு யாரும் இல்லை நம்மை தவிர.

    இப்பிரபஞ்சத்தில் படி நிலைகள் உண்டு. நம்மாளும் எந்நிலைக்கும் உயரமுடியும் . நமக்கு ‌அழிவு என்பது இல்லை. நமது ‌இலக்கு ஒருமை அடைவதே.

    மேலும் மருத்துவம், வானியல், ‌இயற்கை, கலை, வாழ்க்கை முறை , அறிவியல் மேலும் பலவற்றை கூறுவதே ஞானமார்க்கம் .



    மேலை நாட்டவர் ‌இதன் குருவாக பொதுவாக கூறுவது ஈசா வையே (jesus) . ஆனால் உலகின் முதல்‌ குரு ஆதிஓகி ஈசனான சிவனே. (சைவ மத சிவன் அல்ல)


    ஞானமார்க்கம் என்பது சுருங்க சொன்னால் சித்தர் மரபு போன்றது. இனி நீங்கள் படிக்க போகும் பதிவில் புரிந்துகொள்வீர்கள். தொடர்ந்து படியுங்கள்.


    நன்றி.

    No comments:

    Post a Comment

    Total Pageviews