• புதியவை

    சாத்தானிய அவை : அதிர்ச்சி அளிக்ககூடிய 10 விடயங்கள் (10 surprise things about satanic church)

    வாழ்க உறவுகளே,
    இதோ உங்களுக்காக சாத்தானிய அவை Satanic church பற்றி அதிர்ச்சி அளிக்ககூடிய தகவல்கள்.





    10. சாத்தானிக் சர்ச்ன் உறுப்பினர்கள் நாத்திகர்கள் & மனித நேய தத்துவங்களை கொண்டவர்கள்.


                 சாத்தானிய அவையை சார்ந்தோரிடம் கடவுள் நம்பிக்கை இல்லை. எல்லா கடவுளுமே மனிதனால் உருவாக்கப்பட்டது என நம்புகிறார்கள். அதனால் இவர்கள் யாருக்கும் பயந்து குற்றவுணர்வோடு அலைவதில்லை.


    சாத்தானை இவர்கள்,  எல்லாம் தரும் கடவுளாக பார்ப்பதில்லை. சாத்தானிய கோட்பாட்டை தனது வழிகாட்டியாகவே பார்க்கிறார்கள். இயற்கை தூண்டுதல்களை கண்டு பாவம் என நடுங்குவதில்லை.


    9. புனித நாட்கள் மற்றும் சடங்குகள் மீது வேறுபட்ட பார்வை கொண்டுள்ளனர். 


                 
    Satanic rituals 
     தனித்துவத்தை கொண்டாடுவதே சாத்தானியம்; அவை உறுப்பினரின் பிறந்தநாளே மிக முக்கிய புனிதநாள் ஆகும். அம்மாவாசை,  பௌர்ணமி,  இரவும் பகலும் சமமாக வரும் உத்திரம்,  சூரிய சந்திர கிரகணம்,  வசந்தகால தொடக்கம் ஆகியவற்றையும் கொண்டாடுகிறார்கள்.

    சடங்குகளில் மேடையில் நிர்வாணமான பெண் தென் திசையில் தலை வைத்து படுத்திருப்பாள்.  இது தான் Alter of flesh.  இதன் முன் சடங்குகள் நடைபெறும். அனைவரும் கறுப்பு நிற ஆடை அணிந்திருப்பர். ஐந்துமுக நட்சத்திரம் அல்லது சித்தானிய ஆட்டின் வடிவமைப்புடைய அணிகளனை அணிந்திருப்பர்.

    8. Pop கலாச்சாரம்


                       சடங்கின் மறையுரைகளில் குரு Hollywood Blockbuster திரைப்படங்களை பார்க்க ஆலோசனை கூறுவார்.  அவற்றில் சாத்தானிய அடையாளங்களும் கோட்பாடுகளும் காணப்படும்.

    இதன் உறுப்பினர் பலர் Hollywood பிரபலங்கள், பாப் பாடகர்கள்.


    7.சாத்தானிய மந்திரவாதிகள் 


    சாத்தானிக் பைபிலில் வெள்ளை மந்திர வித்தை மற்றும் கறுப்பு மந்திர வித்தை பற்றி எச்சரித்துள்ளது. சாத்தானிய அவையில் இதை ஊக்குவிப்பதில்லை என சொல்லப்படுகிறது.

    பிரபஞ்சத்தின் அடிப்படை பொருள்களான நிலம், நீர்,  நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் அடிப்படையில் மந்திரங்கள் செய்யப்படுகின்றன.

    6. குழந்தைகளுக்கு கல்வி சாத்தானிய கோவில்கள் வழங்குகின்றன.



    2014 முதல் ஃபுளோரிடாவில் குழந்தைகளுக்காக வண்ணபடங்களுடன் கூடிய பாட நூல்கள் இவர்களால் வழங்கப்படுகின்றன. அதில் சாத்தானிய அவை கோட்பாடுகளும் இரக்கம்,  மனித நேயம்,  சுய விருப்பம்,  நட்பு பற்றிய நல்ல கருத்துக்களும் காணப்படுகின்றன.


    5. சாத்தானிய அவை ஒரு தனி நபரால் தொடங்கப்பட்டது. 


    Anton Lawey
    Anton Lavey தொடக்கத்தில் $2 கட்டணத்தில் சாத்தானியம் பற்றிய உரைகளை ஆற்றிவந்தவர். இவர் சர்க்கசில் கூட பணிபுரிந்துள்ளார்.  இது பின் திட்டமிட்டு இலுமிணாட்டிகளால் விரிவுபடுத்தப்பட்டது.

    4. பயமூட்ட கூடிய குற்ற சாட்டுகள்



    சாத்தானிய அவையை சேர்ந்தோர்,  குழந்தைகளை,  செல்ல பிராணிகளை பலிகொடுக்கிறார்கள், , போதைப்பொருள் கடத்தல்,  கொலை என பல குற்றசாட்டுகள் இவர்கள்  மேல் உள்ளது.

    சாத்தானிய அவையில் உள்ள சிலர் இவற்றில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. அவர் கறுப்பு மந்திரத்தை பயிற்சி செய்பவர்கள்.


    3. அவை உறுப்பினராக கட்டணம் உண்டு



    உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் அட்டை வாங்க $200 கொடுக்கனுமாம். அதன் பிறகு குழந்தைகளை சாத்தானிய அவையில் சேர பெற்றோர் கட்டாயப்படுத்துவதில்லை. குழுந்தைகளுக்கு பல மதங்கள் பற்றி அறிமுகப்படுத்தி தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கின்றனர்.


    2. சாத்தானிய அவை தற்பொழுதும் இரகசிய சமூகமாகவே இயங்குகிறது.



    சாத்தானிய அவையின் உறுப்பினர்கள் யார் என வெளிப்படையாக தெரிவதில்லை.
    பெரும்பான்மையான சடங்குகள் காடுகளிலும் சுரங்கங்களிலும் தனிமையிலும் இரகசியமாகவே நடக்கின்றன.

    1. சாத்தானிய அவையை சார்ந்தோர் அனைவரும் இலுமினாட்டிகளோடு தொடர்புடையவர்கள் இல்லை.


     
    சாத்தானிய அவையின் நிறுவனர் அன்டன்,  இலுமினாட்டி குடும்பத்தை சேர்ந்தவர்.  மேலும் மேல் மட்டத்தில் சிலருக்கும் இலுமினாட்டிகளுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் சாத்தானிய அவையிலையே பலருக்கு இலுமினாட்டி என்ற இரகசிய சமூகம் பற்றி தெரியாது.




    அதிர்ச்சி அடைந்திருந்தால் ஒரு Fb Like போடுங்க.  முகநூலில் புதிய பதிவுகளை அறிந்துகொள்ளலாம்.


    இந்த சாத்தானிய அவை பற்றி உங்கள் கருத்து என்ன? 

    No comments:

    Post a Comment

    Total Pageviews